Saturday 8 June 2013

பத்து


வள்ளலார் பசியின் கொடுமையைப் பற்றி மிக விளக்கமாக ஜீவகாருண் யத்தில் சொல்லியிருப்பார். பசி நமக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றது, மாற்றங்களை யெல்லாம் உண்டாக்குகிறது என்பதனை அவரைத்தவிர வேறுயாராலும் விளக்கம் தரமுடியுமா என்றால் முடியாது என்பதனை விட தருவதற்கு இதைவிட எளிமை நடை இல்லை என்பதே என்னின் கருத்து. பசி வந்திட பத்தும் பறந்து போம். என்ற வார்த்தையை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். பத்து என்பது எவைகளைக் குறிக்குமோ அவற்றைப் பற்றித்தான் விளக்கமாக சொல்லியிருப்பார். இது நல்வழி என்ற நூலைப்படித்தவர் களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்ற நினைக்கிறேன்.

சரி   பத்து  என்பவை எவைஎவை என்று இப்போது பார்ப்போம்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திட பறந்து போம்

மன்னிக்கவும் மீண்டும் ஒருமுறை வள்ளலாரின் ஜீவகாருண் யத்தை படித்துப் பாருங்கள். 

No comments:

Post a Comment