Sunday 24 March 2013

இப்படியும் இருக்கலாம்

இப்படியும் இருக்கலாம்


குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
          கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
           மெய் யுரையைபொய்  யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்தமதம்  சமயம்எலாம் பொய் பொய்யே  அவற்றில்
            புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
செறித்திடு சிற்  சபைநடத்தைத்  தெரிந்து துதித்திடுமின்
             சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே

வள்ளலார்  ஏன் சத்தியமெல்லாம் போடுகின்றார். தான் அடைந்த சுகங்களை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற நல்ல உயர்ந்த நோக்கத்தால் தான். "உங்களால் எனக்கு ஒரு உதவியும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. அதாவது உங்களிடமிருந்து நான் ஒரு உதவியும் எதிர்பார்க்கவில்லை. அதனால் என்னுடைய உண்மையான  வார்தைகளை பொய்யுரை என்று நினைத்து விடாதீர்கள். மனிதர்களால் வகுக்கப்பட்ட மதமும், சமையங்களும் பொய்யானது. முற்றிலும் பொய்யானது . அவற்றில் போய் மாட்டிக் கொள்ளாதீர். சிவம் ஒன்றே  பொருள் என்று உணர்ந்து ஞான சபை நடனத்தை தெரிந்து துதித்திடுங்கள். எல்லா நன்மைகளும் கண்டிப்பாக அதே நாளில் வந்து சேர்ந்திடும்" நெறிமாறி செல்லும் இந்த மனமெனும் குரங்கினால்  மருண்டுப்போயிருக்கும் நாமக்காகத்தான் இதனை சொல்கின்றேன். என்ற பொருள் படும் வார்த்தைகள்  தான் " குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற............."

No comments:

Post a Comment