Sunday 24 March 2013

நாம்


   நம்மின் மனம் எப்படிப்பட்டது ? அது எப்படி யெல்லாம் நம்மை ஆட்டிப்படைக்கின்றது? நாம் அதைப்பற்றி நினைக்காதே என்றால் அதைப் பற்றித்தான் நினைக்கும். நினைவில் வைத்துக்கொள் என்றால் மறந்துவிடும். ஆசையை விடு என்றால் அதிகமான ஆசையை வளர்த்துக்கொள்ளும் . இப்படி நம் புத்தி சொல்வதைக்  கேட்கவே கேட்காது.  வள்ளலார் ஒரு பாடலில் சொல்லுவார்,
 உலகத்தில் குரங்கை எல்லாரும் ஆடவைக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன் ஆடவைத்தும்  பார்த்திருக்கின்றேன். ஆனா இந்த மனம் என்கிற கிழக்குரங்கு இப்படி என்னை ஆட்டிப் படைக்கின்றதே! நிரம்பவும் வியப்பக்குறியதாக இருக்கின்றதே!

இதோ அந்தப் பாடல்
                                     தேட்டக்கண்டோர்  மொழிபாகா உலகில் சிலர் குரங்கை
                                     ஆட்டக்கண்டேன் அன்றி  அக்குரங்கால் அவர் ஆடச்சற்றும்
                                     கேட்டுக் கண்டேனிலை  நான்ஏழை நெஞ்சக் கிழக்குரங்கால்
                                      வேட்டுக்கொண்டாடுகின்றேன் இது சான்ற வியப்புடையதே


No comments:

Post a Comment