Sunday 24 March 2013

முன்னுரை

முன்னுரை
                       வள்ளலார் 5818க்கும் மேற்ப்பட்ட  பாடல்களும், 200 க்கும்  மேற்ப்பட்ட தனிப்பாடல்களும் அடங்கிய  திருவருட்பா என்ற மாமறையை அருளியிருக்கின்றார். அவற்றில் 25 அல்லது அதிகபட்சமாக ஒரு 50 பாடல்கள் மட்டுமே பாடப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது . நம்மின் நலனுக்காகவும், நம்மின் மேன்மைக்காவும் பாடப்ப்ட்டப்  பாடல்கள்  ஒராயிரம். அதிலும் நம்மின் நிறைக்குறைகளை சுட்டிக்காட்டி சுய ஆய்வு என்னும் மாபெரும் உள்நோக்குப் பயணத்திற்கும் வழி வகுத்துக்கொடுக்கின்றார். சிலப்பாடல்களில் நம்மை நினைத்து தன்னை கடிந்துக்கொள்வதன் மூலமும் நமக்கு உணரவைப்பார் . ஏன் இப்படி செய்கின்றார் என்றால் நாமும் அவரைப்போன்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். அது மட்டுமல்ல அவரடைந்த சுகத்தினை நாமும் அனுபவிக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தால்.
மிகமிக எளியமுறையில் பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் பாடல்களை அருளியிருப்பார்.

  நான் பலப்பாடல்களை படிக்கும் போது என்னை சிந்திக்கவும், திகைக்கவும், நெகிழவும், உறையவும்  வைத்தன . இவற்றையெல்லாம் எல்லாரும் படித்து  இன்புற வேண்டும், பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

வள்ளலார் வாக்கு
" யானடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே"

  

No comments:

Post a Comment