Tuesday 28 May 2013

அரும்பேறுகள்

வள்ளலார் பெற்ற அரும்பேறுகள்

யான் புரிந்த பெருந்தவம் யாதோ என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
ஊன் மனம் முருக எந்தனைத் தேற்றி ஒளியுருக் காட்டிய தலைவா
'ஏன் மனமிரங்காய் இன்று நீ ' என்றேன்  என்ற சொல் ஒழியடங்கு தன் முன்
ஆன் மகிழ் கன்றென அணைந்தெனை எடுத்தாய் அருட் பெருஞ் ஜோதி

தந்தாய் இன்னும் தருகின்றாய் தருவோய் மேலுந் தனித் தலைமை
எந்தாய் நினது பெருங் கருணை என்னென்று உரைப்பேன் இவ்வுலகில்
சிந்தா குலந் தீர்த்தருள்வாய் என நான் சிறிது  குவு முன்னே  என்பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே !

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
         நவிற்றகலைச் சரிதம்  எல்லாம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ
        விழித்து இது பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே
         காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய  மெய்ப் பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத் தேற்ற
         வயங்கு நடத்தரசே என் மாலை அணிந்தருளே

எவ்விடத்தே எவ்வுயிர்க்கும் இலங்கு சிவமொன்றே
        என்னாணை  என்மகனே  இரண்டிலை ஆங்கே
செவ்விடத்தே  அருளொடு சேர்த்து இரண்டெனக் கண்டறி நீ
       திகைப்படையேல் என்றெனக்குச்  செப்பியச் சற்குருவே
அவ்விடத்தே யுவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி
        அங்கும் இங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடத்தே சிற்சபையிடத்தும் பொற்சபையினிடத்தும்
         ஓங்கு நடத்தரசே என் உரையும்  அணிந்தருளே

Monday 27 May 2013

தானம் தருமம்


நம்மில் பலருக்கு இந்த தானம் தருமத்தின் அர்த்தம் சரியாகப்              புரியவில்லை.  அப்படியிருக்கையில் நம்மின் சந்ததிக்கு எப்படி சரியான அர்த்தம் புரியும். தானம் என்பது நாம் நினைக்கின்றது போல் மிகமிக எளிமையானது அன்று. தான்+ஆம்  =  தானம், தன்னுடைய  அகம், அங்கங்களைக் குறிக்கும். யாரொருவர் தன்னுடைய அகத்தையும் அதாவது 

Sunday 26 May 2013

இப்படியும்


             இந்த மாய உலகத்தில் இருக்கின்ற நாம் இந்த வாழக்கையை மிக சிறப்பாக  நடத்துவதற்க்கு பொருள் ஈட்டியே யாக வேண்டும். அந்தப் பொருளை ஈட்டுவதற்காக நாம் நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சில வேடங்களைப் போட்டே யாக வேண்டியிருக்கிறது. பணிந்தும், தணிந்தும், சில இடத்தில் குழைந்தும், கோப்பப்பட்டும் இருக்க வேண்டியுள்ளது . அதனால் துயரங்களும், துன்பங்களும் நம்மை அழுத்துவதும் உண்டு .  மனதில் இந்த அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற இன்னொரு உணர்வு.  இதுவும் சதவிகிதத்தில் மாறுப்பட்டிருக்கும்.  50க்கு மேல் போனால் "பாதி " என்றும் , 100 ஆனால் "முழுவதும் " அதுவாக மாறிவிடுகிறோம் . நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
  அந்த 100 எட்டாமலும், அறையைத் தாண்டாமலும் நம் மனதை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானாலும் அந்த இறைவனை சரணடையமால் வேறு யாரின் துணையை நாடுவது ?  இங்கு யார்தான் நமக்கு உதவுவார்கள் ?

 நம் "மனத்தின் தன்மை!"யையும் அதனை எப்படி இறைவனில் திருப்புவதை என்பதனையும் இப்போது பார்ப்போம்.

      நேரா அழுக்குத்துணியாகில் நின்றனை நேரில் கண்டும்
      பாராதவர் போலிருப்பார் உடுத்தது பட்டெனிலோ வாரும்
      வாராதிருப்பதேன் ...........



   காயார் சரிகை களிங்கம் உண்டேல் அக்களிங்கம் கண்டால்
   நீயார் நின்பேரெது நின்வூரெது .........